Tuesday, May 29, 2007

உடன்படிக்கை பெட்டி(Ark of the Covenant)

24:9 சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய்.இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீலமும், 27 அங்குல அகளமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும்.11பெட்டியின் உட்புறத்தையும், வெளிபுறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தையும் உபயோகி.பெட்டியின் விளிம்புகளையும் தங்க தகட்டால் மூடவேண்டும்.12பெட்டியை தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய் பக்கத்திற்கு இரண்டாக நான்கு வளையங்களை போடு.பின் பெட்டியை தூக்க்கி செல்ல கழிகளை செய்.இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்படவேண்டும்.13பெட்டியைச் சுமப்பதற்கு தண்டுகளை செய்.அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொனனால் மூடப்படவேண்டும்.14பெட்டியின் ஒரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும்.15இத்த்ண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும்.தண்டுகளை அப்புறப்படுத்தக்கூடாது.16நான் உனக்கு உடன்படிக்கைக் கொடுப்பேன்.அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை.17பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய்.45அங்குல நீலமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதை செய்.18பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களை செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை.தகடாய் அடித்து பொன்னால் அவற்றை செய்.
19 ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறுமுனையிலும் வை.இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும் படி கிருபாசனத்தோடு இணை.20 பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும்.அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடவேண்டும்.அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்கவேண்டும்.21 நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்தப் பெட்டிக்குள் வை.பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து.22 நான் உன்னைச் சந்திக்கும்போது,உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.


கடவுளின் உடன்படிக்கை பெட்டி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே, அந்த உடன்படிக்கை பெட்டியானது சுமார் BC586 ஆம் ஆண்டு எருசலேம் பாபிலோனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்தபொழுது ஜெரேமியா மற்றும் அவருடைய சீடர்களும் ஒருவருக்கும் புலப்படமல் எதிரிகளிடமிருந்து பரிசுத்த இடத்தையும் உடன்படிக்கை பெட்டியையும் மறைத்து வைத்தனர்.இந்த பரிசுத்த உடன்படிக்கை பெட்டி சரியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தின் கிழ் 20 அடி ஆழத்தில் இருந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது(தற்போது அங்கு இல்லை).
27:51மத் இயேசு இறந்தபொழுது,தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.கிழிசல் திரைசீலையின் மேலிருந்து துவங்கி கீழே வரைக்கும் வந்தது,மேலும் நிலம் நடுங்கியது.பாறைகள் நொறுங்கின.கல்லரைகள் அனைத்தும் திறந்தன.தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள்.
மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தின் கீழே மிகப்பெரிய நிலப்பிளவை காணமுடிகிறது.இது இயேசு கிறிஸ்து இறக்கும்பொழுது ஏற்ப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தை உறுதிசெய்கிறது.இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கடவுளின் உடன்படிக்கை பெட்டி வரை நீள்கிறது.மேலும் கடவுளின் உடன்படிக்கை பெட்டியில் இயேசு கிறிஸ்துவின் இரத்த துளிகளை காணமுடிகிறது. இந்த இரத்தம் 20 அடிக்கு மேலே இருந்து நிலநடுக்க பிளவின் வழியாக உடன்படிக்கை பெட்டியை அடைந்துள்ளது.இதன் அர்த்தம் என்ன? இது எதை தெளிவுப்படுத்துகிறது?



பரிசுத்த கூடாரம் அமைப்பு மற்றும் கல்லறைத் தோட்டம்

இதற்க்கு சில பழைய பைபில் நிகழ்வுகளை நினைவுகூற விரும்புகிறேன்.ஆதியாகமத்தில் அபிரகாம் தன் அன்புக்குறிய சொந்த மகனையே கடவுளுக்காக பலியிட துணிந்தது அவர் கடவுளின் மீது வைத்திருந்த அளவற்ற அன்பை காட்டுகின்றது. அதே போல கடவுள் தன் அன்பு மகனை மக்களின் பாவபரிகாரத்திற்காக பலி கொடுத்தார்.இது கடவுள் நம் மீது வைத்துள்ள அளவற்ற அன்பை குறிக்கிறது.ஏன் கடவுள் நமக்காக தன்னுடைய மகனையே பலி கொடுக்க நினைத்தார்? ஆதியாகமத்தில் (யாத் 29:15)பாவ பரிகாரத்திற்காக ஆரோக்கியமான் கொழுத்த ஆட்டுக்குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளித்தனர்.இது கடவுளால் அறிவுறுத்தப்பட்ட ஒன்று. ஆகவே இந்த பாவபரிகாரம் தற்பொழுது செய்கின்ற பாவங்களுக்காக மட்டுமே.நம் ஆதி பெற்றோர்களால் ஏற்ப்பட்ட ஜென்மபாவத்திற்கு சாதரன ஆட்டுகுட்டியையோ அல்லது வேறு விலங்குகளையோ பலியிட்டு ஈடு செய்ய இயலாது.ஏனெனில் மனிதன் படைப்புகளில் எல்லாம் உயர்வானவன்,ஆக அவனுடைய இந்த பாவ பரிகாரத்திற்கு ஒரு மனிதனை பலியிடுவதை தவிர வேறு வழியில்லை.அப்படி பலியிடக்கூடிய மனிதன் நல்ல ஆரோக்கியமான அதே சமயம் எந்த பாவமும் செய்யாத மேலும் ஜென்மபாவம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.அப்படி ஒரு மனிதனை கண்டிப்பாக பார்க்க இயலாது.இதற்கு வழிதான் என்ன?
இதற்காகவே கடவுள் எந்த பாவமும் அறியாத தன் அன்புக்குறிய ஒரே மகனை இமமண்ணுலகுக்கு மனிதனாக அனுப்பி வைத்தார்.அவரை நம்முடைய பாவத்திற்காக சிலுவையின் மூலம் பலியிட்டு ஆட்டுகுட்டியானவரின் இரத்தம் பரிசுத்த உடன்படிக்கையின் மீது தெளிக்கப்பட்டு நம்முடைய பாவங்கள் போக்கப்பட்டது.இதுவும் கடவுளின் இறைத்திட்டத்தில் ஒன்று.
பரிசுத்த கூடாரம் அமைப்பு

பரிசுத்த கூடாரம் அமைப்பு வரைப்படம்

The Hill of the Skull
jesus Garden Tomb


Resting Place of jesus
மேலே உள்ளவை என் அறிவிற்கு எட்டிய அளவிற்கு எழுத முயற்சி செய்துள்ளேன்.இதில் தவறுகள் இருப்பின் சுட்டி காட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு.அதை பதிவு செய்ய மிகுந்த ஆவலாக உள்ளேன்.பிற்காலங்களில் இதனிடையே பதிவுகளை கோர்க்கவும் ஆவலாக உள்ளேன்.
thanks for ur contribute
S.P.Uma Sankar
D.Deivamurugan

1 comment:

HELLO WELCOME---AM CLEMENT HERE.....